சென்னை: தமிழகத்தில் உள்ள 34,062 கோயில்களின் வருமானம் 10,000க்கும் குறைவாகவே உள்ளது. இந்தக் கோயில்களில் பூஜை நடத்துவதற்கு ஏதுவாக ஒரு கால பூஜை திட்டம், தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் நிதி வசதியுள்ள கோயில்களின் உபரி நிதி, கோயில் மற்றும் அறப்பணி நிதி, ஆலய மேம்பாட்டு நிதி போன்ற நிதிகளில் இருந்து மொத்தம் ரூ.2 லட்சம் கோயில் பெயரில், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து, குறிப்பிட்ட கோயிலின் ‘ஒரு கால பூஜைதிட்டம்’ செயல்பட்டு வருகிறது. தற்போது ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 12,959 கோயில்கள் பயனடைகின்றன. இந்தக் கோயில்களில் தற்போது ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இக்கோயில்களில் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை இருப்பதாக கோயில் பூசாரிகள் நலவாரியம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.