பாங்கின்: அருணாச்சல பிரதேச மாநிலம் பாங்கினில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 5.3ஆக பதிவாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசம் பாங்கினுக்கு வடக்கே 1176 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தின் அதிவானது பல்வேறுபகுதிகளில் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர்.