பாட்னா: பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சி மேடையின் அருகில் 15 அடி தூரத்தில் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நிதிஷ்குமாரை ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் இச்சம்பவம் நடந்துள்ளது. பீகார் நாளாந்தாவில் ஜன்சபா என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்றிருந்தார். அப்போது நிதிஷ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சி மேடையின் அருகில் 15 அடி தூரத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.