தீவிரவாதத்திற்கு இடம் தராதீங்க: பாக்.பிரதமருக்கு மோடி வாழ்த்து

புதுடெல்லி: பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், ‘பாகிஸ்தான் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப்புக்கு வாழ்த்துகள். தீவிரவாதத்திற்கு எவ்விதத்திலும் இடமளிக்காத வகையிலான சூழலை இந்தியா விரும்புகிறது. அதன்மூலம் ஏற்படும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை இந்தியா விரும்புகிறது. இவையெல்லாம் நடந்தால் மட்டுமே நமது மக்களுக்கு நல்லது செய்ய முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்ட பதிவில், ‘காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்ட பின்னரே எல்லையில் அமைதியை நிலைநாட்ட முடியும். இந்தியாவுடன் சிறந்த உறவை விரும்புகிறேன். காஷ்மீர் மக்களுக்கு தொடர்ந்து நாங்கள் ஆதரவு அளிப்போம்’ என்று தெரிவித்திருந்தார்.

Related Stories: