சென்னை: அயோத்தியா மண்டபம் தொடர்பாக பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், இந்து அறநிலையத்துறை சட்டத்துக்கு எதிராக அயோத்தியா மண்டபத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் வந்தது. இதையடுத்து 2013ல் சிவசுப்பிரமணிய கோயில் செயல் அலுவலர் அயோத்தியா மண்டபத்தின் தக்கராக நியமிக்கப்பட்டார். தக்கர் நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஸ்ரீராம சமாஜத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். ஆய்வின்போது அயோத்தியா மண்டபத்தில் இருந்தவர்கள் பூட்டுப்போட முயன்றனர்.