வானூர்: வானூர் தாலுகா ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையம் கிராமத்தில் உள்ள சிங்காரவேல்முருகன் கோயிலில் பங்குனி மாத 32ம் ஆண்டு பங்குனி உற்சவ திருவிழா நேற்று காலை துவங்கியது. இதனையொட்டி காவடி வீதியுலாவும், செடல் உற்சவமும் நடந்தது. இதில் பக்தர்கள் 100 உயரத்தில் கிரேன் மூலம் அமைக்கப்பட்ட செடலில் அலகு குத்தி தொங்கியபடி நேர்த்திக் கடன் செலுத்தினர்.