கோவை: ஆப்ரேஷன் கஞ்சா 2.0 வேட்டையில் நேற்று கோவை நகரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனை ஒழிக்கும் பணிகளை மேற்கொள்ள படி டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருந்தார். அதற்க்கு ஆபரேஷன் கஞ்சா 2.0 வேட்டை என பெயர் வைக்கப்பட்டது. இந்த ஆபரேஷன் மூலம் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேட்டை கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தொடங்கி வருகின்ற 17-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.