சென்னை: ரேசன் கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி, அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகள் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும். பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள், கேழ்வரகு வழங்கப்படும். நீலகிரி, தருமபுரியில் வசிக்கும் பழங்குடியின, மலைவாழ் மக்களின் பிரதான உணவாகும் கேழ்வரகு. நீலகிரி, தருமபுரியில் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகைநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிக அளவில் உள்ளனர். அரசுக்கு பதில் கேழ்வரகு தந்தால் ஊட்டச்சத்து உணவு கிடைப்பதுடன் மக்களின் உணவு பழக்க வழங்கங்களும் மாறுபடும் என தெரிவித்தார்.