ஸ்ரீபெரும்புதூர்: அதிக பாரத்துடன் ஜல்லிகற்களை ஏற்றிசென்றபோது பின்னால் சென்ற லாரி மோதி மற்றொரு லாரி மோதி கவிழ்ந்து விபத்துக்குள்னானது. இதில் லேசான காயத்துடன் டிரைவர்கள் உயிர் தப்பினர். சென்னை வண்டலூர்-வாலாஜாபாத் சாலை வழியாக இன்று அதிகாலை அதிக பாரத்துடன் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு 2 டாரஸ் லாரிகள் ஒன்றின் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தது. சாலமங்கலம் அருகே வந்தபோது பின்னால் வந்துகொண்டிருந்த லாரி திடீரென முன்னால் சென்ற லாரியின் பின்புறம் வேகமாக மோதியது. இதனால் நிலைதடுமாறிய மற்றொரு லாரி, அருகில் இருந்த தனியார் ஐஸ்கிரீம் கம்பெனியின் சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் ஏற்றிவரப்பட்ட ஜல்லி கற்கள் சாலையில் சிதறின. இதில் லாரி டிரைவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.