நியூயார்க் : போர் குற்றம் புரிந்த ரஷ்ய ராணுவத்தை சர்வதேச நீதி அமைப்பு முன்பு நிறுத்தமுடியா விட்டால் ஐக்கிய நாடுகள் அவையை இழுத்து மூடிவிட்டு செல்வதே சிறந்தது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் புச்சா நகரில் ரஷ்யா ராணுவத்தால் 400 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்ட நிகழ்வு உலகம் முழுவதுமாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா,வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். 2ம் உலக போருக்கு பிறகு உக்ரைனில் ரஷ்ய ராணுவம் கொடூர போர் குற்றத்தை புரிந்து இருப்பதாக ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.