அனைத்து துறைகளும் சம விகிதத்தில் வளர வேண்டும் என்பதே திமுக அரசின் இலக்கு: காலணி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

விழுப்புரம்: அனைத்து துறைகளும் சம விகிதத்தில் வளர வேண்டும் என்பதே திமுக அரசின் இலக்கு என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். திண்டிவனம் அருகே காலணி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு திமுக அரசு முழு ஒத்துழைப்பு தருகிறது. தொழில் வளர்ச்சி இல்லாத மாவட்டங்களில் அதிக தொழிற்சாலைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 10 மாத கால ஆட்சியில் தமிழ்நாட்டை நோக்கி ஏராளமான தொழில் நிறுவனங்கள் வருகின்றன என்று குறிப்பிட்டார்.

Related Stories: