சென்னை ரவுடி அந்தமானில் சுற்றிவளைப்பு

சென்னை: சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில், கார் ஓட்டுனர் ஒருவர், கடந்த 31ம் தேதி வெட்டுக் காயங்களுடன் கிடந்தார். இதுதொடர்பாக கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், செய்யூரை சேர்ந்த ரவுடி ரஞ்சித், இவரை தாக்கிவிட்டு 8வது மாடியிலிருந்து கயிறு மூலமாக கீழே இறங்கி தப்பி சென்றது தெரியவந்தது. ரவுடி ரஞ்சித்தின் செல்போன் எண்ணை வைத்து விசாரித்தபோது, அந்தமானிற்கு தப்பி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அடையாறு துணை ஆணையர் தலைமையில் தனிப்படை போலீசார் அந்தமானிற்கு விரைந்து சென்று, அங்கு பதுங்கி இருந்த ரவுடி ரஞ்சித்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரஞ்சித்தை டிரான்சிட் வாரன்ட் பெற்று கொண்டு சென்னைக்கு அழைத்து வரும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: