கீவ்: உக்ரைன் ராணுவம் முதல்முறையாக ரஷ்யா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. உக்ரைனின் எல்லையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் ரஷ்யாவிற்குள் இருக்கும் பெல்கொராட் என்ற இடத்தில் ஏராளமான எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் இருக்கின்றன. நேற்று இரவு அங்குள்ள கிடங்கு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 100 அடிக்கு மேலாக நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. முதலில் அது ஒரு விபத்தாக இருக்கக்கூடும் என கூறப்பட்டது. ஆனால் உக்ரைன் ராணுவத்தினர் ஏவுகணை வீசி எரிபொருள் கிடங்கை தகர்த்தது ஆய்வில் தெரியவந்திருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.