ஜெனிவா: உலக மக்கள் தொகையில் 200 கோடி பேர் அதாவது நான்கில் ஒருவர் போர் உள்ளிட்ட மோதல்கள் நடைபெறும் பகுதியில் வசிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கிறது. ஐநா கூட்டம் ஒன்றில் பேசிய அதன் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ், 2ம் உலகப்போருக்கு பின் மோதல் நிறைந்த சூழலில் அதிகளவிலான மக்கள் வசிக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். உக்ரைன், ஏமன், சிரியா, மியான்மர், சூடான், ஹெய்தி உள்ளிட்ட பல நாடுகளில் நிலவும் போர் சூழலை சுட்டிக்காட்டி ஐநா பொதுச்செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். போர் சூழல் காரணமாக கடந்தாண்டில் மட்டும் 8 கோடியே 40 லட்சம் பேர் அகதிகளான அவலம் நடந்துள்ளதாக குட்டரஸ் கூறினார்.