தஞ்சை: தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக வரிவசூல் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது செயல் அலுவலராக புதிதாக பொறுப்பேற்ற பழனிவேல் வரிவசூல் செய்ய பொதுமக்கள், வணிகர்கள், கடை வாடகைதாரர்களை நேரடியாக சந்தித்து வரி செலுத்த வேண்டியதின் அவசியம் குறித்து எடுத்து கூறினார். இதன் அடிப்படையில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் 100 சதவீதம் வரிவசூல் நடைபெற்றுள்ளது.