புதுடெல்லி: மதநல்லிணக்கத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தனது மனுவை மனுதாரர் திரும்பப் பெற்று கொண்டார். கிறிஸ்தவ மதத்தின் சர்ச்சுகள், தங்களுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளை தவறான வழியில் பயன்படுத்துவதாகவும், அவர்களின் செயல்பாடுகள் தவறான வழியில் இருப்பதாகவும், இஸ்லாமிய கோயில்களை நிர்வகிக்க வக்ஃப் வாரியம் போன்றவை இருப்பது போல், கிறிஸ்தவ மிஷனரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வாரியம் அமைக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.