ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இந்த தண்ணீரில் விஷம் கலந்திருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் ஊராட்சியில் சில்கூர் ஏரி உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு பெய்த கனமழையால் இந்த ஏரி நிரம்பி வழிந்தது. இதனால் இந்த ஏரியில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஏரியில் வளர்ந்த மீன்கள் ஏலம் எடுக்க நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை சில்கூர் ஏரியில் சுமார் 200 கிலோவுக்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.