பாஜக-வின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி அமைப்பின் முன்னாள் தலைவரும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் கைது

சென்னை: பாஜக-வின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி அமைப்பின் முன்னாள் தலைவரும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மருத்துவர் சுப்பையாவை சென்னை ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற்றுநோய் துறை தலைவர் மருத்துவராக சுப்பையா சண்முகம் பணிபுரிந்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக அடுக்குமாடு குடியிருப்பில் பார்க்கிங் பிரச்சனையால் மூதாட்டி வீடு வாசலில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

அதனையடுத்து, மூதாட்டி வீட்டின் வாசலில் அநாகரீகமாக நடந்துகொண்ட சுப்பையா மீது சென்னை ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், சென்னை புழல் சிறையில் இருந்த கைதிகளை நேரில் சென்று சந்தித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  

அதாவது, அரசு மருத்துவரான சுப்பையா அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறியதாக சஸ்பெண்ட் நடவடிக்கை அவர் மீது பாய்ந்தது. இந்தநிலையில், 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: