ஆனைமலை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம், ஆழியார் ஓட்டை கரடு என்ற பகுதியில், கடந்த 8ஆம் தேதி சிறுத்தை தாக்கியதில் 8 ஆடுகள் பலியானது. இதையடுத்து, வனத்துறை சார்பில் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தானியங்கி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கு சிறுத்தை நடமாட்டம் உள்ளது கேமராக்களில் பதிவானது. இதையடுத்து, நேற்று முன்தினம் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் 2 கூண்டுகள் அமைத்து சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.