சென்னை : கடந்த நிதியாண்டில் கனிம வளம் மூலம் ஆயிரம் கோடியும், பெட்ரோல், டீசல் மூலம் ரூ.23 ஆயிரம் கோடியும் வருவாய் கிடைத்துள்ளதாக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். திமுக அரசின் 2022-2023 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிதித்துறை செயலாளர் முருகானந்தம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.பேராசிரியர் அன்பழகன் பெயரில் பள்ளி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ. 7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்வழி தனியார் பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படும்.