உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பிலான புதிய மருத்துவமனை கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு, பணியை துவக்கி வைத்தார்.
உத்திரமேருர் பேரூராட்சி 13வது வார்டு பாவோடு தோப்பு தெருவில் பழைய பள்ளி கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்குகிறது. இப்பள்ளியில் அருகில், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மருத்துவமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், ரூ.60 லட்சம் மதிப்பில் மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.