புதுடெல்லி: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் குழுவின் (ஜி-23) மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் டெல்லி வீட்டில், தேர்தல் தோல்வி குறித்து சில தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்தது. அப்போது சோனியா காந்தியே இடைக்கால தலைவராக ெதாடர கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் ஜி-23 தலைவர்கள் தங்களது எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து விவாதிக்க நாளை டெல்லியில் சந்திக்கின்றனர்.