உக்ரைன் போர் காரணமாக பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம், ரஷ்யாவில் தனது அனைத்து வணிகங்களையும் நிறுத்தி வைத்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘உக்ரைனில் நடக்கும் போர் தொடர்பாக பலரின் கருத்தை பெற்றோம். அதன் தொடர்ச்சியாக ரஷ்யாவில் எங்களது அனைத்து வணிகங்களையும் நிறுத்திவிட்டோம். அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு எங்களது நிறுவனம் முக்கிய ஆதரவை அளிக்கும்.