கொல்கத்தா: மேற்குவங்கம் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் உடன் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்தார். மேற்கு வங்காளத்தில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் மற்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி இடையே அரசியல் ரீதியாக பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. மேற்கு வங்காள சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் ஜெகதீப் தன்கர் உரையாற்ற முடியாத அளவுக்கு எதிர்கட்சியான பாஜக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.