மாமல்லபுரம்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சம்பத் (20). அதே பகுதியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பிஏ படிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டார். இதற்காக விசாகப்பட்டினத்தில் இருந்து கன்னியாகுமரி வரை, விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். இதை தொடர்ந்து, கடந்த 25ம் தேதி, தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார். அவர், 25 நாட்களில் 1500 கிமீ தூரம் சைக்கிளில் பயணம் செய்கிறார்.