தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒருசில பகுதிகளில் இடியுடன் மழை பெய்யக்கூடும்: வானிலை மையம் தகவல்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒருசில பகுதிகளில் இடியுடன் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருகில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 முதல் 12ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதி, தெற்கு வங்கக்கடல் பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்….

The post தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒருசில பகுதிகளில் இடியுடன் மழை பெய்யக்கூடும்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: