உக்ரைனில் இன்னும் எத்தனை மாணவர்கள் சிக்கி உள்ளனர்?.. விவரத்தை வெளியிட ராகுல் காந்தி வலியுறுத்தல்..!

டெல்லி: உக்ரைனில் இன்னும் எத்தனை மாணவர்கள் சிக்கி உள்ளனர் என்ற விவரத்தை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்களை மீட்கும் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தில் தற்போது ஏர் இந்தியா உள்ளிட்ட தனியார் விமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடியின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்திய விமானப்படையும் மீட்பு பணியில் ஈடுபட உள்ளது. இதனால் விமானப்படை களமிறங்குவதால் உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்கும் பணி மேலும் விரைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைனில் சூழ்நிலையை மதிப்பிட்டு முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவதில் ஒன்றிய அரசு தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் இன்னும் எத்தனை மாணவர்கள் சிக்கி உள்ளனர் என்ற விவரத்தை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். எத்தனை மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்பதை மாநில அளவில் வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: