திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில், ‘‘மிலன் 2022’ சர்வதேச கடற்படை சாகச நிகழ்ச்சி நடந்தது. இதற்கான சர்வதேச நகர கடற்படை வீரர்களின் அணிவகுப்பில் முதல்வர் ஜெகன்மோகன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் பேசியதாவது: வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள அந்தந்த நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு அவசியம். நாட்டிலுள்ள மஸ்கண்டோக் கப்பல் கட்டும் தளத்தில் 75 சதவீத உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன போர்க்கப்பலை இந்தியா உருவாக்கியுள்ளது. அதற்கு ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் என்று பெயரிட்டோம்.