திருவள்ளூர்: தமிழ்நாட்டில் அடுத்த நிதியாண்டில் மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய அவர், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த நிதியாண்டில் 100 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றிருப்பதால் அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 50 மாணவர்கள் சேர்க்கை நடத்த ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்கப்படும் என்று கூறினார்.