நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறும்: திருமாவளவன் பேச்சு

சென்னை: தாம்பரம் மாநகராட்சி, கன்னடபாளையம் பகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில், போட்டியிடும் வார்டுகள், வாக்குச் சாவடிகளில் நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. திமுக கூட்டணி சிந்தாமல் சிதறாமல் முழு பலத்தோடு இந்த தேர்தலை சந்திக்கிறது.

அதிமுக கூட்டணி சிதறி விட்டது, இந்த தேர்தலில், 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். அதேபோல நகராட்சிகள், பேரூராட்சிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்.திமுக  கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற்றவுடன், மேயர் பதவி உட்பட மற்ற பதவிகள் குறித்து, தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, திமுக தலைமையின் கீழ் பேசி முடிவெடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: