‘பீப் பாடல்’ விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு எதிரான வழக்கு ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.நடிகர் சிம்பு கடந்த 2015ம் ஆண்டில், பெண்களை பற்றி ஆபாசமாக  பாடியதாக கூறி இணையத்தில் ‘பீப் சாங்’ ஒன்று வெளியானது. இதனை தொடர்ந்து பாடல் பாடிய சிம்பு மற்றும் இசையமைத்த அனிருத் ஆகியோருக்கு எதிராக பெண் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதனை தொடர்ந்து சிம்பு, அனிருத்துக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சென்னை மத்திய குற் றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், தனக்கு எதிராக இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவை மாஜிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால், கோவை ரேஸ் கோர்ஸ் போலீசில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.மேலும், நடிகர் சிம்பு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கு தொடர்பாக போலீசார் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.

Related Stories: