ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே ரயிலில் வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசியை பதுக்கி ரயில்கள் மூலம் வெளி மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக வேலூர் உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து, தனிப்படை ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் நேற்று காலை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.