போபால்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாதாள கால்வாய் திட்ட கட்டுமான பணி நடந்த போது மண் சரிவு ஏற்பட்டு 9 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 7 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய 2 பேரின் கதி தெரியவில்லை. கட்னி மாவட்டத்தில் உள்ள நர்மதா நதியின் வலது கரையில் பாதாள கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று மாலை தொழிலாளர்கள் பணியில் இருந்த போது மண் சரிவு ஏற்பட்டு பாதாள கால்வாய் இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் 9 பேர் சிக்கிக் கொண்டனர்.