திமுக வட்ட செயலாளர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து

சென்னை: திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்கு பகுதி, 34அ வட்டத்தைச் சேர்ந்த என்.டி.சேகர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கட்சி பணியாற்ற அனுமதிக்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வைத்த கோரிக்கையினை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, திமுக உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: