திருவண்ணாமலையில் வீதி வீதியாக பிரசாரம் நகர்ப்புற தேர்தலில் அளிக்கும் வாக்கு சாதனை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கும் வாக்கு-திமுக மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் பேச்சு

திருவண்ணாமலை : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் அளிக்கும் வாக்குகள், இந்தியாவின் சாதனை முதல்வரான மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கும் வாக்குகள் என எ.வ.வே.கம்பன் பேசினார்.திருவண்ணாமலை நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, வார்டு வார்டாக சென்று திமுக மாநில மருத்துவர்அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, திமுக வேட்பாளர்கள் 1வது வார்டு அ.கோவிந்தனை ஆதரித்து, செட்டிக்குளமேடு, மாந்தோப்பு, புதுத் தெரு, பாரதித் தெரு, போளூர் ரோடு, ராம் நகர் ஆகிய பகுதிகளிலும், 2வது வார்டு ஆண்டாள் செல்வராஜை ஆதரித்து அம்பேத்கர் தெரு, தமிழ்மின் நகர், ஆண்டாள் நகர், ஜன்னத் நகர் ஆகிய பகுதிகளிலும் வீதி, வீதியாக சென்று எ.வ.வே.கம்பன் வாக்கு சேகரித்தார்.

மேலும், திமுக வேட்பாளர் 5வது வார்டு அ.கண்ணனை ஆதரித்து, புதுவாணியங்குளத் தெரு, சிவசக்தி விநாயகர் கோவில் தெரு, எல்.ஜி.ஜி.எஸ். நகர், போளூர் ரோடு ஆகிய பகுதிகளிலும், 6வது வார்டு ஏ.டபள்யூ.சர்தார்காசீமை ஆதரித்து, வாணியங்குளத் தெரு, ஊத்துக்குட்டைமேடு, படையப்பா நகர், நந்திவாய்த் தீர்த்தம் ஆகிய பகுதிகளிலும் வாக்கு சேகரித்தார்.

அப்போது, அவருக்கு அந்த பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்தும், மேள, தாளங்கள் முழங்கவும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து, எ.வ.வே.கம்பன் பேசியதாவது:

தற்போது நடைபெறும் நகர்ப்புற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும், நல்லாட்சி அமைந்திட வேண்டும், அதுவும் மக்கள் விரும்பும் திமுக ஆட்சியாக இருந்திட வேண்டும். இன்றைக்கு இந்தியாவின் நம்பர் 1 முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் அளிக்கிற வாக்குகள் அனைத்தும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அவரது சாதனைகளுக்கும் அளிக்கிற வாக்குகள்.

விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹ஆயிரம் உள்ளிட்ட திமுக அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவுள்ளது. சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து வருபவர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் நடைபெறும் நல்லாட்சி நம்முடைய உள்ளாட்சியிலும் ெதாடர்ந்திட உதயசூரியன் சின்னத்துக்கு வாங்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.தரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், டி.வி.எம்.நேரு, பொதுக்குழு உறுப்பினர்கள் நா.பழனி, ப்ரியா விஜயரங்கன், மாவட்ட பிரதிநிதி இல.குணசேகரன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் இரா.கார்த்திகேயன், நா.ப.கார்த்திகேயன், எஸ்.ஸ்ரீதர், மில்.முருகன், வழக்கறிஞர் ஜெ.பாலாஜி, நகர அமைப்பாளர் ம.வினோத்குமார், எழில்மாறன், வழக்கறிஞர் ராஜேஷ்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: