சென்னை: பள்ளிக் கூடத்திற்குள் ஹிஜாப் அணிவது தவறு என்றால் காவி துண்டு, நீல துண்டு அணிந்து வருவதும் தவறு தான் என பாஜக நிர்வாகி குஷ்பு பேட்டியளித்தார். பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்பதே என் கருத்து என தெரிவித்தார். ஹிஜாப் அணிந்து செல்வதும் காவித் துண்டு அணிந்து செல்வதும் தவறு தான் என கூறினார். ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்வினையாக தான் காவி அணிந்து சென்றனர் என தெரிவித்தார். ஹிஜாப் அணிந்து வருவது அவர்களுடைய தனிப்பட்ட முடிவு என பேசினார். ஆனால் பள்ளிக்கூடத்திற்குள் சீருடையில் தான் வர வேண்டும் என தெரிவித்தார். பள்ளிக்கூடத்திற்கு வெளியில் வரை ஹிஜாப் அணிந்து வரலாம். பள்ளிக்குள் நுழையும்போது சீருடையில்தான் செல்ல வேண்டும் என கருத்து தெரிவித்தார்.