திரிபுரா: திரிபுராவில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. அதனை தொடர்ந்து, உத்தரப்பிரதேசம், மராட்டியம், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, திரிபுராவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டது. திரிபுரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.