சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் முழுவதும் காலரா நோய் பரவியது. அப்போது ஊர்மக்கள் மாரியம்மனை வணங்கி வழிபட்டனர். அப்போது தை, மாசி மாதம் வளர்பிறையில் தெருக்களை சுத்தப்படுத்தி, முதல் வாரம் கும்பிடு விழாவினை நடத்தி விட்டு, மறுவாரம் அழகர் தோப்பிலிருந்து அம்மன் கரகத்தை கொண்டு வந்து வைத்து வழிபாடு செய்தால் மக்களை காப்பாற்றுவேன் என்று அம்மன் குறி சொல்லியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 50 வருடங்களுக்கு மேலாக சின்னாளபட்டியை சேர்ந்த பொதுமக்கள் தை, மாசி மாதங்களில் தங்களது தெருக்களில் பெரும் விழா போல் சந்து மாரியம்மன் கும்பிடு விழாவினை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். நேற்று சின்னாளபட்டியிலுள்ள 25 தெருக்களில் சந்து மாரியம்மன் கும்பிடு விழா நடந்தது.