ஆமிர்கானுக்காக இந்தியில் நடிக்கிறேன்: சொல்கிறார் நாக சைதன்யா

மும்பை: ஆமிர்கான்  கேட்டுக்கொண்டதால் அவரது படத்தில் நடிக்கிறேன் என நாக சைதன்யா கூறினார். ஆமிர்கான், கரீனா கபூர் நடிக்கும் படம் லால் சிங் சட்டா. பாரஸ்ட் கோம்ப் ஹாலிவுட் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. இதில் ஆமிர்கானின் நண்பனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசப்பட்டது. கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்கவில்லை. இதையடுத்து நாக சைதன்யா நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியது: இதில் தென்னிந்தியாவை சேர்ந்த ராணுவ வீரரின் கேரக்டர் வருகிறது. அதில் நடித்துள்ளேன். ஆமிர்கான் கேட்டதால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். காரணம், அவருடன் சேர்ந்து நடித்தால் கிடைக்கும் அனுபவம்தான். குறிப்பிட்ட சில நடிகர்களிடமிருந்து தான் அத்தகைய அனுபவங்களை பெற முடியும். அதில் ஆமிரும் ஒருவர். கார்கிலில் படப்பிடிப்பு நடந்தபோது, கடும் குளிருக்கு இடையே அங்கேயே பல நாட்கள் தங்கியிருந்து நடித்தோம். அது எல்லாம் மறக்க முடியாத அனுபவம். இந்த படம் ஏப்ரலில் திரைக்கு வருகிறது.

Related Stories: