சென்னை: கச்சத்தீவு பெருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க இலங்கை அரசை வலியுறுத்த கோரி, ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில், புனித அந்தோணியார் வருடாந்திர பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. ஆனால், பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த ஆண்டு திருவிழாவில் தமிழக மீனவ பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்தி எனது கவனத்திற்கு வந்துள்ளது.
கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய பெருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க இலங்கையை வலியுறுத்த வேண்டும்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஸ்ரீ
- இலங்கை
- கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- மத்திய அமைச்சர்
- Jaisankar