தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் இன்று காலை முதலே பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்தனர். பாஜக வேட்பாளர்கள் மண்டல அலுவலகத்தில் வழங்கப்பட்ட டோக்கன்களை பெற்றுக்கொண்டு வரிசையில் காத்திருந்தனர். திடீரென பாஜகவினர், மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில், உதவி தேர்தல் அலுவலர் சுரேஷின் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன், பாஜகவினரை சமாதானப்படுத்தினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.