பெய்ஜிங் : சீனாவின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களை இந்தியா புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.2020ம் ஆண்டு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த மோதலில் பங்கேற்ற ராணுவ கமாண்டரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான சுடரை ஏந்திச் செல்ல சீனா அனுமதி அளித்ததை எதிர்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா - இந்திய படைகள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.இந்த தாக்குதலில் கமாண்டராக இருந்தவர் Qi Fabao. தாக்குதலில் தலையில் காயம் அடைந்த அவரது வீரதீர செயயை கவுரவிக்கும் வகையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி துவக்க நாள் நிகழ்ச்சியில் சுடரை ஏந்திச் செல்ல சீனா அனுமதி அளித்துள்ளது.