சென்னை: தனது பெயரில் போலியான டிவிட்டர் பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக ஷாலினி அஜித் கூறியுள்ளார். டிவிட்டரில் இணைந்த, இணையாத பல நடிகர் நடிகைகளின் பெயரில் போலி பக்கம் இயங்குவது அதிகரித்து விட்டது. சில மர்ம நபர்கள் இதுபோல் செயல்படுகின்றனர். சில நடிகர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இந்த போலி கணக்கு தொடங்குவது தொடர்கிறது.