புதுடெல்லி: ‘இந்தியா, இஸ்ரேல் இடையான 30 ஆண்டு கால உறவில், புதிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டிய சரியான தருணம் இது’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான உறவு 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நாளையொட்டி, பிரதமர் மோடி சிறப்பு செய்திகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி, ‘‘இந்தியா மற்றும் இஸ்ரேல் நாட்டு மக்களுக்கு இடையிலான உறவு எப்பொழுதும் சிறப்பான வகையிலே இருந்து வருகிறது. இருநாடுகளுக்கிடையேயான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதற்கு இது சரியான நேரம் ஆகும். புதிய இலக்குகளை நாம் நிர்ணயிக்க வேண்டும். பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவு இனிவரும் காலங்களில் மேலும் விரிவடையும் என நம்புகிறேன்’’ என கூறி உள்ளார்.