சுஷாந்த் வழக்கில் தொடர்புடைய போதை பொருள் கடத்தல்காரன் கைது: நடிகையுடன் துபாயில் இருந்தது அம்பலம்

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை தொடர்ந்து அவரது காதலி ரியா உள்ளிட்ட  பலர் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான போதை பொருள் கடத்தல்காரன் சாஹில் ஷா என்ற ஃப்ளாகோ (31) கடந்த 8 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஃப்ளாகோவை அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘தலைமறைவாக இருந்த ஃப்ளாகோ கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ.25 லட்சம் பணம் மற்றும் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 310 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட கணேஷ் ஷேர், சித்தாந்த் அமீன் ஆகியோருக்கும், ஃப்ளாகோவிற்கும் தொடர்பு உள்ளது. கடந்த 8 மாதங்களாக துபாயில் தொலைக்காட்சி நடிகையுடன் இருந்த ஃப்ளாகோ, கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா திரும்பினார். வெளிநாட்டில் பதுங்கி இருந்ததால்தான் அவரை உடனடியாக கைது செய்யவில்லை. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்தனர்.

Related Stories: