சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் 19ம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவித்தது. உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக - பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை தொடங்கியது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு கட்சி நிர்வாகிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி, பாஜக சார்பில் அண்ணாமலை உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.