சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகள் குஷ்பூ, எச்.ராஜா மீது காங்கிரஸ் தரப்பில் புகார் எழுந்துள்ளது. தஞ்சை மாணவி தற்கொலை செய்தது தொடர்பாக விசாரணை நடக்கும் நிலையில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.