சென்னை: சோதனை அடிப்படையில் பிப்ரவரி 1 முதல் கைபேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு முறை அமலுக்கு வர உள்ளது. முதல் கட்டமாக சென்னை, வேலூர் மண்டலங்களில் மட்டும் சோதனை முறையாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நுகர்வோரை மின்கட்டணத்தை கணக்கிடும் வகையில் கைபேசி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்து கட்டணத்தை நுகர்வோரே கணக்கீடு செய்யலாம்