சென்னை: மதுரவாயல் அருகே நிலத்தை மீட்டுத் தரக்கோரி போலீஸ் குடியிருப்பில் உள்ள வாக்கி டாக்கி டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை 2 மணிநேரம் போராடி போலீசார் கீழே இறக்கினர். சென்னை மதுரவாயல் அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் 41 வயதான கார் ஓட்டுநர் நாகராஜ். இவருக்குச் சொந்தமாக திருவள்ளூர் அடுத்த அரண்வயலில் பூர்வீகச் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. அந்த சொத்தை உறவினர் ஏமாற்றி போலி ஆவணம் மூலம் விற்பனை செய்ததாகவும், அந்த நிலத்தை மீட்டுத் தரக்கோரி போலீசில் அவர் புகாரளித்துள்ளார்.