தமிழகத்தில் 29,976 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 29 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா  தொற்று கண்டறியப்பட்டது. ஒரே நாளில் 27,507 பேர் குணமடைந்தனர். இதுகுறித்து  மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில்   நேற்று 1,50,931 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 29,976  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவிற்கு சிகிச்சை பெருவோரின் எண்ணிக்கை 2,13,692 ஆக உள்ளது. நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 27,507 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதேபோல்,  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 47 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 21 பேரும், தனியார் மருத்துவமனையில்  26 பேரும் நேற்று உயிரிழந்தனர்.

அதிகபட்சமாக  சென்னையில் நேற்று 5,973 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. கோவையில்  3,740, செங்கல்பட்டு 1883, ஈரோடு 1302, கன்னியாகுமரி 1035, சேலம் 1457,  திருப்பூர் 1787 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியது. சிகிச்சை பலனின்றி  சென்னையில் நேற்று 23 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பு கடந்த வாரம் 30 ஆயிரத்தை தாண்டிய நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தபோதும்  தொற்று பரவலின் எண்ணிக்கை குறைந்தவாறு உள்ளது. அந்தவகையில் இரண்டாவது  நாளாக தினசரி பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துவருகிறது.

Related Stories: