சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 29 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஒரே நாளில் 27,507 பேர் குணமடைந்தனர். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,50,931 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 29,976 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவிற்கு சிகிச்சை பெருவோரின் எண்ணிக்கை 2,13,692 ஆக உள்ளது. நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 27,507 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 47 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 21 பேரும், தனியார் மருத்துவமனையில் 26 பேரும் நேற்று உயிரிழந்தனர்.